கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பல விதமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன
இவற்றில் பல பழமையானவை. ஒரு விதமான மாசு கட்டுப்பாடு சாதனங்களும் இல்லாமல் பல வருடங்களாக
மண்ணிலும் நீரிலும் மாசுபடுத்தும் ரசாயனங்களை கொட்டி வந்துள்ளன
இப்போது RTI மூலமாக SIPCOT Area Community Environmental Monitoring என்ற ஒரு அமைப்பு அரசிடம் இருந்து கேட்டு தெரிந்துள்ள தகவல்கள் மிகவும் கவலைக்கு உரியன
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நிறுவனம் பிப் 2013 முதல் ஏப்ரல் 2014 வரை தொழிற்பேட்டையில் 9 இடங்களில் இருந்தும் வெளியே உள்ள 2 கிராமங்களில் இருந்தும் நீரை எடுத்து சோதனை செய்தனர்
- இந்த சோதனை முடிவுகளை வெளியே சொல்லவில்லை.
- இந்த அறிக்கையில் நீர் மிகவும் பாழ் அடைந்துள்ளது மட்டும் இல்லாமல் குரோமியம் துத்தநாகம் காட்மியம்
போன்ற heavy metals அளவுக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது - இவை புற்று நோய் கிட்னி பிரச்னைகள் தோல் பிரச்சனைகள் வர காரணம் ஆகும்
- கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்பவரும் அருகே இருப்பவரும் ஜாக்கிரதை!
நன்றி: சிப்காட் கடலூர்
One thought on “SIPCOT கடலூர் ரசாயன மாசு”